




வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இன்றைய தினம் புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூர் கந்தனின் தேர்திருவிழா காண ஒன்று கூடினர்.
ஏராளமான பக்தர்கள காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்யும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்
