மஹர சிறையில் இருந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, கைதிகள் தும்பர, வெலிக்கடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவ ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள் அறிக்கையில், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹரா சிறைச்சாலையின் நுழைவாயிலில் உள்ள சாலைத் தடுப்பிற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மஹர சிறைச்சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு கைதிகளை உறவினர்கள் சந்திப்பது மீண்டும் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles