கனடாவில் சுற்றுலா சென்ற இருவர் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்பு

கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என ஒன்ராறியோ மாகாணக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கபுஸ்காசிங் கருக்குக் கிழக்கே அமைந்துள்ள குவெனெட் ஏரிக்கு அருகே இந்த இரண்டு திடீர் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஏதேனும் சதிச் செயல் அல்லது குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

சுற்றுலா சென்ற இருவர் வீடு திரும்பவில்லை என்று ஓகஸ்ட் 1ஆம் திகதி பொலிஸாருக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து அவசரக்கால மீட்புக் குழு, மேப்பநாய் படை, காவல்துறை விமானப் பிரிவு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

தேடுதலின் முடிவில், ஓகஸ்ட் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருவரின் உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.

“இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை” என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணக்குப் பின்னரே வெளியாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles