கனடா பண்ணையில் தீவிபத்து; 20,000 பன்றிகள் கருகி உயிரிழப்பு!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிம்கோ நகருக்கு வெளியே உள்ள ‘ஹைவே 3’ பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பண்ணைக் கட்டடடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்ததால், அதனை அணைக்கப் பெருமளவிலான தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

இத்தீயணைப்புப் பணியில்: 8 வெவ்வேறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வர 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தீயின் வீரியத்தால் பண்ணைக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக மனிதர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவத்தில் சதித்திட்டம் அல்லது சந்தேகத்திற்குரிய பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles