பொரளை மகசின் சிறையில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், விசேட அதிரடிப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் தற்போது பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலதிக படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
