பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக தனது 94 ஆவது வயதில் காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகை சவுகார் ஜானகி காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
1931ஆம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர்.
கடந்த 1950ஆம் ஆண்டு, ‘சவுகார்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
