அமெரிக்காவிற்கும் – கனடாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ளதை தொடர்ந்து கனடா மீது ட்ரம்ப் நிர்வாகம் வரி விதித்துள்ளது.
இந்த புதிய வரி விதிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு, ஓகஸ்ட் 22 நள்ளிரவு முதல் பிரிவு 338-இன் கீழ் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் Dominic LeBlanc மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் Jamieson Greer ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் மூன்று நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அமெரிக்க நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தப் புதிய நடவடிக்கைகள் கனடிய ஏற்றுமதிகளில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பங்கையே பாதித்தாலும், அவை எஃகு, மரக்கட்டைகள் மற்றும் தானியங்கி வாகனங்கள் மீது ஏற்கனவே உள்ள அமெரிக்க வரிகளை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வரிகள், கனடாவின் பலவீனமான பொருளாதார மீட்சியைத் தடுக்கக்கூடும் என்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பரந்த பேச்சுவார்த்தைகளில் வரும் மாதங்களில் இரு அண்டை நாடுகளும் எவ்வாறு ஈடுபடும் என்பதையும் பாதிக்கக்கூடும் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
