காணிகளை விடுவிக்கக் கோரி வலி.வடக்கு மக்கள் 10 ஆவது வாரமாக போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பினர்.

அதேவேளை , யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் மகஜர் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles