


தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமாகின.
நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின்போது, அவரது வெண்கல உருவச்சிலை நிறுவப்பட்டது.
இதன்போது, தியாக தீபம் திலீபனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்தனர்.
அதேவேளை, தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
