யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனலெட்சுமி செல்லத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-11-2022
அன்புக்கு வரைவிலக்கணம்
எது என ஆழ்ந்தபோது
கண்முன்னே அம்மாவின்
பாசநினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும்
நீங்களாக கண்களை மூடி
காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகிறேன்!
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றைச் சூரியனாய் பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…
You must be logged in to post a comment.