Sangathy
News

ஸ்ரீலங்கா இடைக்கால கிரிக்கெட் குழு இரத்து செய்யப்பட்டது

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

இடைக்கால குழுவை நியமிக்கும் முடிவை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதாக ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் அவதானிப்புகளுக்கான கணக்காய்வு அறிக்கை குறித்து எழுத்து மூலம் தங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

John David

Solution to Palestine Israel Problem

Lincoln

US asks Lanka to hold LG polls without further delay

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy