Sangathy
News

மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றார் ஜஸ்ரினா யுலேக்கா

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்து கரையொதுங்கிய 1500 கிலோகிராம் எடையுடைய கடற்பசு

Lincoln

சுகாதார சேவையின் மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ​சுகாதார செயலாளர்

John David

Local Government Election before 10th March – ECSL

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy