
Colombo (News 1st) அதிவேக வீதிகளில் பதிவாகும் விபத்துகளில் 80 வீதமானவை சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை செலுத்தும்போது சாரதிகள் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
அதிவேக வீதிகள் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6, 275 விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.















