Sangathy
News

அடம்பன் இரட்டை கொலை; இருவர் கைது

Colombo (News 1st) மன்னார் – அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதுகளை உடைய குறித்த இருவரும் நேற்று(20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

ஈச்சிலவக்கை மற்றும் நொச்சிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அண்மைய தொற்று நோய்கள் குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!

Lincoln

ஒடிசா ரயில் விபத்து: பலியான 278 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்

Lincoln

யாழ். மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy