Sangathy
Srilanka

ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி..!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ரயில் பெட்டியில் சாப்பிட்டுவிட்டு கையை கழுவுவதற்காக சென்றபோது ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுமி வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் இருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கட்டுபாத்த கெகுனுகொல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மட்டக்களப்புக்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தொரியவந்துள்ளது.

வெலிகந்த பொலிஸ் நிலையப் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கப் பரிந்துரை..!

tharshi

25% of global death toll in USA

Lincoln

அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியில் விபத்து : மூவர் பலி – இருவர் காயம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy