இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிக அளவான வேட்பாளர்களைக் கொண்ட ஜனாதிபதி தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது.
இத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஒரு வேட்பாளர் அதிகரித்தால் செலவு மேலும் 200 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டிருந்த நிலையில் இதுவரையிலும் நடைபெற்ற 7 நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக அளவான வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (15.08.24) காலை 9.00 மணிமுதல் 11.00மணிவரை வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.