யாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் கிருஷ்ணபிள்ளை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்துமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனிதா, பிருந்தா, கீர்தனா, ஜெனிபர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், யுகன், நிருஜன், தர்சன், சர்தீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, சிவகுமாரி, ரவிக்குமார், ஜெயக்குமாரி, அதிஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற உதயராஜா, கராளசிங்கம், தயாகரன், தர்மவதனி, ராஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கருணாமூர்த்தி, கருணாநிதி, திருமதி, கண்ணதாசன், கருணாகரன், புஸ்பலதா, செந்தமிழ்ச்செல்வன், ராதா ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
செல்வராணி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், வாசுகி, தங்கமலர், லவன், கவிதா, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும், டியான், இஷான், கேய்லா, மேய்ரா, அமாயா, ராயன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.