இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 21 இல் நடைபெறவுள்ள நிலையில் இத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் சமூக மட்ட சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன் அவர்களைக் களமிறக்குகின்றன.
தேர்தலில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமையல் எரிவாயு சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.