Saturday, September 21, 2024
Homeஇலங்கைத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம்...

இலங்கைத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம்…

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்புக் குழுவை அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அழைப்பினை தொடர்ந்தே இப் பணிக்குழு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ஆறு தடவைகள் இலங்கைத் தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளது.

தற்போதைய தேர்தல் கண்காணிப்புக் கடமைகளுக்காக  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோர் என்பவர் தலைமையிலான குழு இலங்கை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments