Saturday, September 21, 2024
Homeஇலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி...

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி…

இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கைத்துப்பாக்கிக்கு மேலதிகமாக ரிப்பீட்டர் வகை துப்பாக்கியினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற அங்கத்தவர்களிடம் விண்ணப்பம் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பிரகாரம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 225 பேருக்கும் குறித்த வகை துப்பாக்கிகளை வழங்கமுடியும் எனவும், அதற்கான கட்டணத்தினை அவர்களிடம் அறவிட்டே துப்பாக்கி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

தற்போது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கி பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments