இந்தியாவின் ராஜஸ்தானில் ஆண் ஒருவர் பெண் ஒருவரை தனது பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்த காணெளியொன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து குறித்த செயலை மேற்கொண்ட நபர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேமராம் என்ற 32 வயதுடைய நபரே மது போதையில் இந்த கொடூரமான செயலைப் புரிந்துள்ளார். குறித்த நபர் போதையில் தினமும் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாகவும் அன்னைய தினம் இவ்வாறு மோசமாக நடந்துகொண்டதாகவும் அயலவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மனைவியின் கை கால்களைக் கட்டி மோட்டார் சைக்கிளுடன் இணைத்து கற்கள் நிறைந்த பாதையில் வேமாக இழுத்துச் சென்றுள்ள காட்சி பார்ப்பவர் மனதை பதைபதைக்க வைக்கின்றது.