Saturday, September 21, 2024
Homeகீரிமலை கிருஸ்ணர் ஆலயம் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி...

கீரிமலை கிருஸ்ணர் ஆலயம் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி…

இது வரை காலமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்துக்குப் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயம் கடந்த 30 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குமாறு பல காலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக  இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட முடியும் என இராணுவத்தரப்பினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments