Saturday, September 21, 2024
Homeஇலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றலாப் பயணிகள்...

இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றலாப் பயணிகள்…

இலங்கைக்கு  இந்த வருடத்தில் மாத்திரம்  வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில்  சுமார் 12 இலட்சத்து 71 ஆயிரத்து 432 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் அதிகளவானோர்  இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 2 இலட்சத்து 37 ஆயிரத்து 649 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது தவிர ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் பிரித்தானியா,உள்ளிட்ட பல  நாடுகளிலிருந்தும்   ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இம்மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் மொத்தமாக 73 ஆயிரத்து 373 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments