Saturday, September 21, 2024
Homeநாகையிலிருந்து காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை...

நாகையிலிருந்து காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை…

காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று நாகபட்டினத்திலிருந்து வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கப்பல் 47 பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளது.இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், நண்பகல் 12.00 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு வழிப் பயணக் கட்டணம் 16,500 இலங்கை ரூபாயாகவும் இருவழி பயண கட்டணம் 34,400 ரூபாயாகவும்  அறவிடப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கப்பலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

ஒருவர் தம்முடன்  பொருட்களை 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும்    60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

Most Popular

Recent Comments