ஆம்பில் புயல் காரணமாக ஜப்பானின் டோக்கியோ இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அடுத்த 12 மணித்தியாலங்களில் புயலின் வேகம் மணிக்கு 212 கிலோமீற்றராக அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குழந்தைகள்,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறித்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.