கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கல்முனை நகரில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் நீண்ட காலமாக கொழும்பிலிருந்து கல்முனைக்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும்
சந்தேக நபர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.