உக்ரைன் – ரஸ்யா இடையில் இடம்பெற்று வரும் போரில் ரஸ்ய படைகளில் இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவவீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் உக்ரைன் படைகளால் ஐந்து இலங்கை வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கை வீரர்களையும் விடுதலைசெய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இலங்கை வீரர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.