இலங்கை ஆசிரிய சேவையில் குறித்த தரத்திலிருந்து மற்றொரு தரத்திற்கு பதவியுயர்வு பெறுவதற்கு தொழில் மீளாய்வினை முடித்திருக்க வேண்டிய அவசியமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழில் மீளாய்வினை பூரணப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்ட அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கடிதம் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில்,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் இலக்கம் 1885/38 மற்றும் 2014.10.23ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில் தொழில் மீளாய்வு தொடர்பிலான 11.2.3 பந்தியினை நீக்குவதற்கும், இலங்கை ஆசிரியர் சேவையில் பதவி உயர்வுகளை வழங்கும் போது குறித்த தொழில் மீளாய்வினை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் தேவையினை நீக்குவதற்கும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் இலக்கம். PSC/EST/7/2/1(II)/2012 மற்றும் 2024.07.24ம் திகதியுடைய கடிதத்தின் மூலமாக அறியத் தரப்பட்டுள்ளது.
03. அதற்கமைய, இலங்கை ஆசிரியர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பின் 11.2.3. பந்தி நீக்கப்படுகின்றது என்பதுடன் அப் பந்தியின் கீழ் தொழில் மீளாய்வினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கி 2023.12.29ம் திகதியும் 50/2023 இலக்கமும் உடையதாக கல்வி சுற்றுநிருபமானது அதனைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாத வகையில் இரத்துச் செய்யப்படுகின்றது.