Sunday, September 22, 2024
Homeபோய் படம் பண்ணுங்க சார்..ஷங்கரின் வாழ்க்கையை மாற்றிய விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்..!

போய் படம் பண்ணுங்க சார்..ஷங்கரின் வாழ்க்கையை மாற்றிய விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்..!

இயக்குனர் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவரை பற்றி தெரியாத ஒரு சில தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் தான் ஷங்கர். ஒரு நடிகராகவேண்டும் என்ற ஆசையோடு நாடகத்தில் நடித்து வந்த ஷங்கருக்கு எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஷங்கர் நடிக்கும் நாடகத்தை பார்க்க வந்த எஸ்.ஏ சந்திரசேகர் அவரை தன் அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.

ஷங்கரும் எஸ்.ஏ சந்திரசேகர் தன்னை நடிக்க தான் கூப்பிடுகிறார் என ஆசையோடு அவரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர், தன்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்துகொள்கிறீர்களா ? என ஷங்கரிடம் கேட்க அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சரி மிகப்பெரிய இயக்குனர் தானாக கூப்பிட்டு வாய்ப்பு கொடுக்கின்றாரே என்பதற்காக ஷங்கரும் எந்த மறுப்பும் இன்றி எஸ்.ஏ சந்திரசேகரிடம் பணியாற்றினர்.

கிட்டத்தட்ட எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஷங்கர் 17 படங்கள் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கின்றார். அதன் பிறகு எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த பவித்ரனுடன் பணியாற்றினார் ஷங்கர். அப்போது தான் ஷங்கருக்கு ஜென்டில்மென் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு ஷங்கருக்கு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தானாம்.

அவர் தான் ஷங்கருக்கு, இதுபோல தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஒரு படம் தயாரிக்க கதைக்கேட்டு வருகின்றார். நீங்க போய் உங்க கதையை சொல்லுங்க என ஊக்குவித்து ஷங்கரை குஞ்சுமோனிடம் கதை சொல்ல அனுப்பி வைத்துள்ளார். விஜய்யின் விஷ்ணு, நிலவே வா, பகவதி போன்ற படங்களை இயக்கி சிறந்த கமர்ஷியல் இயக்குனர் என பெயரெடுத்தவர் தான் ஏ.வெங்கடேஷ்.

தற்போது நடிகராகவும் பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார். இவரும் ஷங்கரும் ஒன்றாக தான் பவித்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளனர். அப்போது தான் ஏ.வெங்கடேஷ் இதுபோல குஞ்சுமோன் ஒரு படத்தை தயாரிக்க கதை கேட்டு வருகின்றார். நீங்க போய் உங்க கதையை சொல்லுங்க, கண்டிப்பா உங்களுக்கு படம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் குஞ்சுமோன் அலுவலகத்திற்கு போன் போட்டு அப்பாயின்மென்ட்டும் வாங்கியிருக்கிறார் ஏ.வெங்கடேஷ். ஆனால் ஷங்கர் சற்று தயங்கியுள்ளார். இங்கு படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது, அதனை விட்டுவிட்டு எப்படி கதை சொல்ல போகமுடியும் என யோசித்துள்ளார் ஷங்கர். ஆனால் ஏ.வெங்கடேஷ் தான், அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்க போய் படம் பண்ணுங்க சார் என ஷங்கரை ஆட்டோவில் ஏற்றிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஷங்கர் குஞ்சுமோனிடம் கதை சொல்லி ஜென்டில்மேன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இதைப்பற்றி ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அன்று ஏ.வெங்கடேஷ் கொடுத்த உத்வேகம் தான் என்னை குஞ்சுமோனிடம் கதை சொல்ல வைத்தது என ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments