Sunday, September 22, 2024
Homeகொழும்பைச் சேர்ந்த கைதி யாழ் சிறையில் திடீர் மரணம்...

கொழும்பைச் சேர்ந்த கைதி யாழ் சிறையில் திடீர் மரணம்…

கைதி ஒருவர்  யாழ்  சிறைச்சாலையில்  திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசார் தெரிவித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பு – 12 ஜ வசிப்பிடமாக கொண்ட 44 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால்  சிறைச்சாலை காவலர்களுக்கு பல தடவைகள் அறிவித்ததன் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments