Sunday, September 22, 2024
Homeஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கத் தடை....

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கத் தடை….

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க தடைவிதித்து இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது  என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் {18.08} வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்  இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்  அவர் கூறுகையில் பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.பொது வேட்பாளர் 2 வார காலத்தின் பின்னரே கூட்டத்தில் பங்கேற்க முடியும் என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments