அமெரிக்காவின் டெக்கசாஸ் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற கார் விபத்து ஒன்றில் ஐவர் பலியாகியிருந்த நிலையில் அதில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தமிழர் எனவும் தெரியவந்துள்ளது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அரவிந்த(45) பிரதீபா (42) இவர்களது மகள் ஆண்ட்ரில் (17) ஆகியோரே விபத்தில் உயிரிழந்தனர்.
அவர்களின் 14 வயது மகன் அவர்களுடன் பயணிக்காதததால் விபத்திலிருந்து தப்பித்துள்ளார். எனினும் குடும்பமே இறந்துவிட்ட நிலையில் சிறுவன் தனித்து விடப்பட்டுள்ளான்.
இந்நிலையில் சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டமுடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி 8 லட்சம் டொலர்கள் இதுவரை திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.