இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளார்.
மெதமுலானவில் உள்ள அவரது இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போது இந்தியா- இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா X பதிவில் தெரிவித்தார்.
