
வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிஸாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்றட்ட ஹைஏஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்கார்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் – .
வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் வாகனம் ஒன்று, இன்று அதிகாலை ஒ1.15 மணியளவில் சென்றுள்ளது.
குறித்த வாகனத்தை அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
ஆனால் பொலிஸாரின் உத்தரவை மீறி குறித்த வாகனம் அதிவேகமாகச் சென்றுள்ளது. வாகனம் மீண்டும் பொலிசாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வந்தை அவதானித்த பொலிசார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கற்பகப் பிள்ளையார் கோவில், வட்டு வடக்கு, சித்தன்கேணியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயஸ் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவனை பொலிஸார் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே நேரம் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுளல் வருவதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

