இலங்கை தொடர்பாக ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles