தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விஜய் பங்கேற்கும் சகல நிகழ்ச்சிகளிலும் கறுப்பு நிற பொட்டுடனேயே பங்கேற்கிறார்.
இது தொடர்பில் அரசியல், சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், அவர் வைக்கும் பொட்டு அரகஜா திலகம் என்று கூறப்படுகிறது. இது, புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
கோயில்களில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்தப்படும் ‘அரகஜா’ திலகம், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவி வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் புதிய தோற்றமும் ‘அரகஜா’ திலகமும் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
