5,000 பரதநாட்டியக் கலைஞர்கள் நடனமாடி காலி முகத்திடலில் புதிய கின்னஸ் சாதனை!

Group of people in colorful traditional attire raising a framed certificate together on a stage, celebration evident in their smiles and gestures.

Large crowd of dancers in red and yellow costumes performing in an outdoor parade with tall modern buildings in the background and colorful flags lining the area. Large crowd in colorful traditional attire gathered on a grassy area by the coast, with tall red/yellow festival flags in the background.

காலி முகத்திடலில் இன்றுஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும் அவரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், சங்கமம் குளோபல் அக்கடமி மற்றும் சங்கமம்லியா ஹொலிடேஸ் ஏற்பாட்டிலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

“சங்கமம் 2026” எனும் பெயரில் நடைபெற்ற இப்பெருவிழாவில் 5,000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு, 10,000 சலங்கைகளை ஒரே தாளத்தில் ஒலிக்கச் செய்து உலக சாதனை படைத்தனர்.

இன்று காலை கடல் அலைகளின் ஓசையை விட கால் சலங்கைகளின் ஓசை ஓங்கி ஒலித்த காலி முகத்திடல், தமிழ் கலாசார பெருமிதத்தின் அடையாளமாக மாறியது. பரதநாட்டியத்தின் நுணுக்கமும் ஒற்றுமையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் பங்குபற்றிய கலைஞர்களையும் நேரில் சந்தித்து பாராட்டினார். “இலங்கை மண்ணில் தமிழ் கலையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இத் தருணம் இலங்கை மக்களுக்கு கிடைத்த பெருமை” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் குழுமியிருந்தனர். சலங்கை ஒலியால் அதிர்ந்த இக்கடற்கரை, இலங்கை தமிழரின் கலைத் திறனுக்கு சான்றாக அமைந்தது.

“சங்கமம் 2026” உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை உறுதி செய்து பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபின் கரங்களுக்கு கின்னஸ் சாதனை நிறுவனத்தின் மூலம் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் பல விசேட அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles