உலகளாவிய ரீதியில் கணனியில் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் வழியாக ஃபேஸ்புக் தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கையடக்க தொலைபேசிகளில் முகப்புத்தக செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது அந்த நிலைமை வழமைக்குத் திரும்பிவிட்டதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
