கனடாவின் வன்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மெயின் ஸ்ட்ரீட் மற்றும் 24ஆவது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சந்தேக நபரான அந்த இளைஞர், உணவகத்தின் வெளிப்புறப் பகுதியில் அமர்ந்திருந்த மனிதர்களை நோக்கிச் சாப்பிடும் கரண்டிகள் மற்றும் கத்திகளை வீசியும், தட்டுகளை உடைத்தும் கடுமையான அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
கையில் கோடாரியை வைத்துக்கொண்டு அங்கு இருந்த மக்களை வெட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வான்கூவர் பொலிஸார், தங்கள் காவல் துறை நாய் பிரிவின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் காயமடைந்திருந்ததால், முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வான்கூவர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
