Sangathy
News

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

Colombo (News 1st) இன்று(29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. தற்போது 400 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 340 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. தற்போது 510 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோலின் புதிய விலை 375 ரூபாவாக அமையவுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாக அமையவுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

305 ரூபாவிற்கு விற்கப்பட்டும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Horse had bolted by the time we figured Sri Lanka out in 1996 – Azhar

Lincoln

ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் பொது நிறுவனங்களாக மாற்றப்படவுள்ளன

John David

ஐ.ம.சக்தியின் ஹர்ஷ டி சில்வா அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார் – சஜித்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy