Colombo (News 1st) நெலுவ – சுதுவெல்லாவ பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவனொருவன் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர்கள் சென்றிருந்த உறவினரின் இல்லத்திற்கு அருகிலிருந்த ஓடையொன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுவன் ஓடைக்குள் வீழ்ந்ததையடுத்து, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 வயதும் 7 மாதங்களும் நிரம்பிய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.