Sangathy
News

தமிழ்நாடு – தலைமன்னாரை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் – இந்திய பிரதமருக்கு கலாநிதி வீராசாமி கடிதம்

Colombo (News 1st) தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என நரேந்திர மோடிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி வீராசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே கடலுக்கு அடியில் முதலாவது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

Lincoln

மிக்ஜம் புயலை தேசியபேரிடராக அறிவிக்க வேண்டும் – டி.ஆர்.பாலு

Lincoln

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் போக்குவரத்து அமைச்சர் கோரிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy