Sangathy
News

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

⭕ வட மாகாண ஆளுநராக P.S.M. சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

⭕ கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம் பெற்றுள்ளார்.

⭕ வட மேல் மாகாண ஆளுநராக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடமை நேரத்தில் திறன்பேசி (Smartphone) பாவனையை மட்டுப்படுத்துமாறு வட மாகாண சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்

Lincoln

PMB declines to release Rs 1.2 bn FD for paddy purchasing

Lincoln

முக்கியமான ஆவணங்கள் இடைக்கால நிர்வாகக்குழு உறுப்பினர்களால் அகற்றப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் குற்றச்சாட்டு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy