Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில்,
⭕ வட மாகாண ஆளுநராக P.S.M. சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
⭕ கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம் பெற்றுள்ளார்.
⭕ வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.