Colombo (News 1st) முக்கியமான திட்டங்களுக்கு பணம் செலுத்தப்பட்ட வவுச்சர்களும் ஆவணங்களும் இடைக்கால நிர்வாகக்குழு உறுப்பினர்களால் அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் வழங்கும் உறுப்பினர்களின் செயற்பாடுகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடுமையாக நிராகரிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களை உடனடியாக மீள வழங்காவிடின், அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.