Sangathy
News

அத்துருகிரிய உப மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு; சில பகுதிகளில் மின் தடை

Colombo (News 1st) அத்துருகிரிய, ஹோமாகம, அவிசாவளை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கான மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

அத்துருகிரிய உப மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டமையே இதற்கான காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இவற்றில் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின்  பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தாயின் மரண செய்தி கேட்டு உயிரிழந்த மகன்..!

Lincoln

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி

Lincoln

3 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கடத்தல்; பெண்கள் இருவர் கைது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy