Colombo (News 1st) நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.