Sangathy
News

படல்கும்புரயில் பழக்கடை உரிமையாளர் கொலை; வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Colombo (News 1st) மொனராகலை – படல்கும்புர வீதியின் 11 ஆம் கட்டை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றின் உரிமையாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

படல்கும்புர பகுதியை சேர்ந்த 45 வயதானவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படல்கும்புர பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

John David

US Amb Chung visits South Asia’s first submarine cable depot

Lincoln

மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்கவும் – மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy