Colombo (News 1st) இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 65 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் இரு மகன்களும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.