Sangathy
News

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளையில் வைத்து இன்று (27) மாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020 பெப்ரவரி 27 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இடம்பெற்ற சட்டவிரோத கூட்டத்தில் பங்கேற்றமை, தீங்கு விளைவித்தமை, நீதிமன்ற உத்தரவை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இந்திக்க விதான பத்திரன எனும் உறுப்பினரே வசந்த முதலிகேவுடன் கைது செய்யப்பட்ட மற்றைய நபராவார்.

Related posts

Budget passed with majority of 43 votes

Lincoln

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்து பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கம்

Lincoln

வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy