Colombo (News 1st) வாரியபொல – பண்டாரகொஸ்வத்தை பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 4 வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குழந்தை வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் பின்புறத்தில் காணப்பட்ட கிணற்றின் சுமார் 2 அடி உயரம் கொண்ட மதிலின் ஊடாக குழந்தை கிணற்றில் வீழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.